Wednesday, April 17, 2024

சூரிய ஒளி: கல் அமைதி காக்கிறது. மனிதன் ஆர்ப்பரிக்கிறான்!

தன் மீது ஒளி விழுந்த போதும்,
இது ஒன்றும் அதிசயம் இல்லை என்று  அந்தக் கல்லும் அமைதி காக்கிறது. ஆனால், ஆறறிவு படைத்த மனிதனோ ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறான்.

அறிவியல் தொழில்நுட்பம் அறியாத மக்களை மகிழ்விப்பதற்கோ அல்லது ஏமாற்றுவதற்கோ அல்லது முட்டாள்கள் ஆக்குவதற்கோ அறிவியல் தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. 

இது போன்ற 'அதிசயங்களுக்குப்' பின்னே உள்ள அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய புரிதல் அல்லது தகவல் மிகச் சொற்பமானவர்களிடம் மட்டுமே எடுத்துச் செல்லப்படுகிறது. மாறாக, பெரும்பான்மையானோர் வாய்வழிச் செய்தியாகவே கேட்டு அதை நம்பும் நிலைதான் இன்னமும் நீடிக்கிறது. 


அறிவியல் தொழில்நுட்ப அறிவும் இயக்கவியல் பொருள் முதல்வாத (dilectics of materialism) அறிவும் பாமரனையும் எட்டும் வரை இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கும். 

மேலும் துன்பங்களும் துயரங்களும் வாழ்க்கையில் தொடரும் வரை அறிவியல் தெரிந்தவர்களும் இதற்குள் இழுத்துச் செல்லப்படுவார்கள் என்பதும் கள எதார்த்தம்.

அறிவியல் தொழில்நுட்ப அறிவு மேலோங்கி, துன்பங்களும் துயரங்கள் அற்ற ஒரு வாழ்க்கை முறை அமையும் சமூகத்தில் வேண்டுமானால் இது போன்ற ஏமாற்று வேலைகள் மறைந்து ஒழியும். எனவே அது போன்ற ஒரு சமூகத்தை நோக்கி பயணிப்பதுதான் இன்றைய காலத்தின் தேவை.

ஊரான்

செய்தி: இந்து தமிழ், ஏப்ரல் 18, 2024